News December 7, 2024
மாநகராட்சி உதவி ஆணையர் சஸ்பெண்ட்

ஊட்டி நகராட்சி ஆணையராக இருந்த ஜகாங்கீர் பாஷா சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கினார். அவரிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறுகிய நாளில் அவர் மீண்டும் நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜகாங்கிர் பாஷாவை இன்று பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 11, 2026
நாங்குநேரி தொகுதியில் போலீசார் அணிவகுப்பு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து, மஞ்சங்குளம் ஆகிய பகுதிகளில் இன்று மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுச் தேர்தல் பாதுகாப்பு மற்றும் அமைதியாக தேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
News March 11, 2026
நாங்குநேரி தொகுதியில் போலீசார் அணிவகுப்பு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து, மஞ்சங்குளம் ஆகிய பகுதிகளில் இன்று மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுச் தேர்தல் பாதுகாப்பு மற்றும் அமைதியாக தேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
News March 10, 2026
நெல்லை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


