News December 7, 2024
குமரி செக் மோசடி வழக்கு – அரசு ஊழியர் விடுதலை

நட்டாலத்தைச் சேர்ந்த பால்ராஜ், பேரூராட்சி பணியாளர். இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.28 லட்சத்து 80 ஆயிரம் கடனாக வாங்கி செக் கொடுத்து மோசடி செய்ததாக, குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பால்ராஜ் நிரபராதி என இன்று (டிச.7) தேதி தீர்ப்பளித்தார்.
Similar News
News August 19, 2025
காணாமல் போன தொழிலாளி மலையில் எலும்புக்கூடாக மீட்பு

தோப்பூரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜலிங்கம் (38). இவர் 2 மாதத்திற்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவரை காணவில்லை. இது தொடர்பாக, ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த 17ம் தேதி ஆரல்வாய்மொழி மலை உச்சியில் எலும்பு கூடாக கிடந்துள்ளனர். ராஜலிங்கத்தின் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News August 19, 2025
குமரி இளைஞர்களே, இந்த தேதியை NOTE பண்ணிக்கோங்க

கன்னியாகுமரி இளைஞர்களே, நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஆக. 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 13 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <
News August 19, 2025
குமரி: காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்று (18.08.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கோட்டார், நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் SSI மற்றும் HC நிலை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலங்களில் 04652-220417 மற்றும் அலுவலர்களின் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.