News December 7, 2024
குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

ஶ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்த ராமசாமி மகன் ராம்குமார்(34). இவர் மீது கடந்த மே மாதம் கொலை வழக்கும், அக்.மாதம் ஒப்பந்த நிறுவன மேலாளரை தாக்கி பணம் பறித்த வழக்கும், நவ.மாதம் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டிய வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனையடுத்து எஸ்.பி.கண்ணன் பரிந்துரையின் பேரில்,மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்,ராம்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 11, 2026
115 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி ஏப்.6 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 115 மையங்களில் 11,966 மாணவர்களும், 12,526 மாணவிகளும், தனித்தேர்வர்கள் 666 பேரும் என மொத்தம் 25,158 மாணவர்கள் எழுதுகின்றனர். மேலும் தேர்வினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News March 11, 2026
விருதுநகர்: EX ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை

விருதுநகர் அருகே வரலொட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி(57). இவர் காரியாபட்டி சாலையில் வில்லிபத்திரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி கண்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
News March 10, 2026
விருதுநகர்: கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது – MP

தமிழ்நாட்டில் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்கள் முன்பே பார்த்த ஒரு நிலை. இந்த நிலை குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். மக்களை மீண்டும் ஒரு தேவையற்ற நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


