News December 7, 2024

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

image

ஶ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்த ராமசாமி மகன் ராம்குமார்(34). இவர் மீது கடந்த மே மாதம் கொலை வழக்கும், அக்.மாதம் ஒப்பந்த நிறுவன மேலாளரை தாக்கி பணம் பறித்த வழக்கும், நவ.மாதம் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டிய வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனையடுத்து எஸ்.பி.கண்ணன் பரிந்துரையின் பேரில்,மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்,ராம்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 28, 2025

சிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறப்பதில் சிக்கல்

image

சிவகாசி பகுதியில் அக்.31 அன்று பட்டாசு ஆலைகளை திறந்து அடுத்த ஆண்டு தீபாவளிக்கான உற்பத்தியை தொடங்க சிலர் முடிவு செய்துள்ளனர். சில பட்டாசு ஆலைகள் பிரதோஷமான நவ.3 அன்று சிறப்பு பூஜையுடன் உற்பத்தியை தொடங்க உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பட்டாசு ஆலைகளை விரைவில் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

News October 28, 2025

சாத்தூர்: மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரியசெல்வம்(39). இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோல்வார்பட்டி அணை பகுதியில் டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு இன்று சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமகாராஜன் மணல் திருடிய மரிய செல்வத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News October 28, 2025

விருதுநகர்: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை.,

image

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <>கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

error: Content is protected !!