News March 23, 2024
டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் தொடர்ந்தால்?

EDயால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அந்தப் பதவியில் நீடித்தால், ஆம் ஆத்மி கட்சி பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். முறைகேடு புகாரில் கைதானதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சட்டவிதிகள் இல்லை என்றாலும், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அது வழிவகுக்கும் எனக் கூறிய நிபுணர்கள், மத்திய அரசும் அதனை துரிதப்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.
Similar News
News December 27, 2025
தனியார் பஸ்களை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு

தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து TNSTC சார்பில் இயக்குவது தொடர்பான வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, தேசியமயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் மட்டுமே இந்த பஸ்கள், தொலைதூர பயணங்களுக்காக இயக்கப்படும். இதன் மூலம் பண்டிகை காலங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்கலாம் என அரசு கூறுகிறது. இதுபற்றி பொதுமக்கள் 30 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அரசு கூறியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News December 27, 2025
உயில் எழுதவில்லை என்றாலும் சொத்து கிடைக்கும்!

உயில் எழுதாத ஒரு இந்துவின் சொத்துகள், 3 நிலைகளில் பிரித்தளிக்கப்படுகிறது. முதல் நிலையில் இறந்தவரின் மகன், மகள், தாய் ஆகியோருக்கு சொத்து பங்கிடப்படும். முதல் நிலை இல்லாமல் இருந்தால், 2-ம் நிலையில் உள்ள சகோதர சகோதரிகள், மருமகன்கள், மருமகள்களுக்கு அளிக்கப்படும். இவை இரண்டும் இல்லாமல் இருந்தால், 3-ம் நிலையான தந்தையின் உறவினர்கள் (அ) தாயின் உறவினர்களுக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
BREAKING: திமுக அரசுக்கு அடுத்த நெருக்கடி!

<<18674972>>இடைநிலை ஆசிரியர்கள்<<>>, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுவொருபுறம் இருக்க, திமுக கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வரும் தேர்தலில் தான் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்து கூட்டணியில் புதிய பிரச்னையை கிளப்பியுள்ளார். இதனால், கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.


