News December 7, 2024
மாற்றுத்திறனாளியிடம் சுமார் 11 இலட்சம் மோசடி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பனைக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி உதயகுமார் என்பவரை ஏமாற்றி சுமார் 11 இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாக போலி நெடுஞ்சாலைத்துறை ஊழியரான கட்டனூர் அருகே உள்ள பொட்டப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட 12 பேர் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்த நிலையில், முருகனை நரிக்குடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 10, 2026
விருதுநகர்: கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது – MP

தமிழ்நாட்டில் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்கள் முன்பே பார்த்த ஒரு நிலை. இந்த நிலை குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். மக்களை மீண்டும் ஒரு தேவையற்ற நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
விருதுநகர்: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News March 10, 2026
சிவகாசி: பள்ளி அருகே பட்டாசு கடைகள் – அதிர்ச்சி

சிவகாசி அருகே மாரனேரியில் தனியார் பள்ளி அருகே சுமார் 200 மீட்டர் தூரத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு அருகே பட்டாசு கடைகளுக்கு விதியை மீறி உரிமம் வழங்கப்பட்டதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


