News December 7, 2024
1 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம்

கடந்த 1 வருடமாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி தோழி மூலமாக கல்லூரி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்ட நபர்கள், மாணவியின் நிலையை பயன்படுத்தி வால்டாக்ஸ் சாலை, பெரியமேடு பகுதிகளில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News March 7, 2026
சென்னை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

சென்னையில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. பயனுள்ள இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 7, 2026
டி-20 கிரிக்கெட் – மெரினாவில் நேரலை

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நாளை (மார்ச்.8) குஜராத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை மெரினா கடற்கரையில் பெரிய திரையில் நேரலை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. மாலை 5-7 மணி வரை நாட்டுப்புற பாடல், அதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. ஷேர் பண்ணுங்க.
News March 7, 2026
சென்னை டி.காபி விலை ஏற்றம் இல்லை

வணிக சிலிண்டர் விலை ஏற்றத்தால் டீ, காபி விலை ஏற்றம் செய்யப்படாது என பெருநகர சென்னை டீ, காபி கடை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால் சிலிண்டர் விலை இன்று உயர்ந்துள்ளது. வணிக சிலிண்டர் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் சென்னையில் வழக்கமான விலையில் டீ, காபி விற்பனை செய்யப்படும் எனவும் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


