News December 7, 2024

வலியை மத்திய அரசு உணரவில்லையா?

image

கடந்த 9 ஆண்டுகளில் தமிழக அரசு, புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் மத்திய அரசிடம் நிவாரணப் பணிகளுக்காக மொத்தமாக ₹1.25 லட்சம் கோடி நிதி உதவி கேட்டிருக்கிறது. ஆனால், அதில் 6% தொகை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் நிவாரணப் பணிகளுக்கு ₹6,675 கோடி கேட்டிருந்த நிலையில், வெறும் ₹945 கோடியை அளித்துள்ளது. புயலால் நிலை குலைந்துள்ள தமிழக மக்களின் வலியை மத்திய அரசு உணரவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News March 5, 2026

இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா?

image

இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது. இதனால், ஈரானுக்கு எதிராக இந்திய துறைமுகங்களை USA பயன்படுத்துவதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறையின் முன்னாள் ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகோர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது அடிப்படை ஆதாரமற்றது என மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தவறான தகவல் பரப்பியதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

News March 5, 2026

மார்ச் 5: வரலாற்றில் இன்று

image

*1953 – சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஸ்டாலின் நினைவு நாள் *1956 – நடிகை ஸ்ரீபிரியா பிறந்தநாள் *1958 – நடிகர் நாசர் பிறந்தநாள் *1959 – அரசியல்வாதி சிவ்ராஜ் சிங் சௌஹான் பிறந்தநாள் *1976 – இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாள் *2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை *2013 – நடிகை ராஜசுலோசனா நினைவு நாள்

News March 5, 2026

‘B-2 Bomber’ பின்னணியில் இந்திய வம்சாவளி

image

உலகிலேயே பயங்கர போர் விமானமான B-2 Bomber-ஐ ஈரான் மீது USA பயன்படுத்துகிறது. இதன் உருவாக்கத்தில் நோஷிர் கோவாடியா என்ற இந்திய வம்சாவளியின் பங்கும் உண்டு. 1944 மும்பையில் பிறந்த இவர், USA-ல் Aeronautical Eng படித்தார். பிறகு Northrop Grumman என்கிற போர் விமானங்களை உருவாக்கும் கம்பெனியில் பணியாற்றினார். ஆனால், இதுபற்றி சீனாவிற்கு தகவல் தந்ததாக USA கோர்ட் அவருக்கு 32 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

error: Content is protected !!