News March 22, 2024
இந்தப் பழக்கம் மிகவும் ஆபத்தானது

இரவில் தூங்கச் செல்லும் முன் புகைப்பிடிக்கும் பழக்கம் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். புகைப்பிடித்தல் புற்றுநோயை வரவழைக்கும் எனக் கூறினாலும், அதற்கு அடிமையானவர்கள் கைவிட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், புகைப்பிடித்த உடனே தூங்கச் செல்வது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறியுள்ள மருத்துவர்கள், குறைந்தது 1 மணி நேரத்திற்கு முன் அதனை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News October 24, 2025
மகளிர் உரிமைத் தொகை… அமைச்சர் சொன்ன குட்நியூஸ்

பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் அமைச்சர் சக்கரபாணி, மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்த பெண்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு ₹1,000 வழங்கப்படும் என்றார். மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
News October 24, 2025
உலகில் நம்ப முடியாத உண்மைகள்

நாம் வாழும் இந்த உலகம் பல அதிசயங்களால் நிரம்பியது. இங்கு நம்ப முடியாத விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் உண்மைகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு உண்மையும் ஒரு புதிய பார்வையைத் தருகிறது. இதில், சிலவற்றை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த சுவாரஸ்யமான தகவலை கமெண்ட்ல சொல்லுங்க.
News October 24, 2025
ALERT: இந்த மாவட்டங்களில் நள்ளிரவு வரை மழை பெய்யும்

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.