News December 7, 2024

சனிக்கிழமையில் சுதர்சனரை வணங்கினால்…

image

மகாவிஷ்ணுவின் கையில் உள்ள சுதர்சனச் சக்கரத்தை ஸ்ரீசக்கரத்தாழ்வார் என்று விஷ்ணு புராணம் போற்றுகிறது. அரங்கனுக்கு உகந்த சனிக்கிழமைகளில் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று, சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாத்தி, நெய் விளக்கேற்றி சந்நிதியை 12 முறை வலம் வந்து ‘ஓம் சுதர்ஸனாய வித்மஹே ஜ்வாலா சக்ராய தீமஹி தன்னோ: சக்ர ப்ரசோதயாத்’ என்ற ரதாங்க மந்திரத்தை சொல்லி வேண்டினால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

Similar News

News March 3, 2026

கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

image

*1 முதல் 9-க்குள் ஏதாவது ஒரு நம்பரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். *அதை 3-ல் பெருக்குங்கள் *அதில் வரும் விடையோடு 3-ஐ கூட்டுங்கள் *கிடைக்கும் விடையை மீண்டும் 3-ல் பெருக்குங்கள் *இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும் *அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. விடை சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க. நீங்களும் நண்பர்கள் கிட்ட கேட்டு மாஸ் பண்ணுங்க.

News March 3, 2026

புத்தகம் சுமந்த பிஞ்சுகள்.. புதைக்குழிக்குள்..

image

இங்கு தோண்டப்பட்டுள்ள குழிகளில் பல சிரிப்புகள் புதையவுள்ளன. ஈரானில் பெண்கள் பள்ளி மீது நடந்த தாக்குதலில் பலியான மாணவிகளை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழிகள் இவை. பள்ளிக்கு சிரித்த முகத்துடன் சென்ற குழந்தைகளின் உயிரற்ற உடல்களை பார்த்து பெற்றோர்கள் <<19277394>>கதறி அழுத காட்சி<<>> நெஞ்சை உலுக்குகிறது. அதிகார வெறிக்காக நடக்கும் போரில் ஏன் எந்தப் பாவமும் அறியாத குழந்தைகளும், அப்பாவி மக்களும் பலியாக வேண்டும்?

News March 3, 2026

சங்கீதாவுக்கு இதை செய்யவில்லை.. விஜய் REWIND

image

விஜய் – சங்கீதா விவகாரம் பேசுபொருளான நிலையில், NDTV-க்கு அளித்த பழைய பேட்டியில் விஜய் பேசியது வைரலாகிறது. அதில், திருமணத்திற்கு முன்பு தனக்கு நிறைய பரிசுகளை சங்கீதா கொடுப்பார். ஆனால், திருமணத்திற்கு பிறகு அவை குறையத் தொடங்கின. காரணம், நான் அவர் கொடுக்கும் பரிசுகளுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என விஜய் கூறியுள்ளார். தன்னை அதிகளவில் புரிந்துகொண்டு நடப்பவர் சங்கீதா என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!