News March 22, 2024
ஆயுதங்களை காட்டி மிரட்டல் 7 பேர் கைது

பெருங்குளம் அருகே நதிப்பாலம் விலக்கில்
இரவில் அவ்வழியே செல்வோரை ஒரு கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாக ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் சிலர் புகாரளித்தனர். இது தொடர்பாக விசாரணையில் பெருங்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், கேதீஸ்வரன், முகிலன், அஜய் & 3 சிறுவர் உட்பட 7 பேரை உச்சிப்புளி போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News July 6, 2025
ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகளில் தங்கும் அறைகள் – change photo

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத ஐந்து ரயில் பெட்டிகள் பயன்படுத்த உள்ளனர். இதனை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படியில் விடப்பட உள்ளது. www.ireps.gov.in இணையதளம் வாயிலாக ஜூலை 15-ம் தேதிக்கான விண்ணப்பிக்க என ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
News July 6, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 5ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜூலை 6 காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட போலீசாரின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவசர நிலையில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News July 5, 2025
மதுரை – இராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்

இராமநாதபுரம் – இராமேஸ்வரம் இடையே பணிகளை நடைபெறுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. வரும் 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, மதுரை – ராமேஸ்வரம் பயணியர் ரயில் ராமநாதபுரம் வரை மட்டும் இயங்கும். அதேபோல், புறப்படுவதும் ராமநாதபுரத்தில் இருந்து மட்டுமே இருக்கும். மேலும், சனி, ஞாயிறு மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் ரயில் ராமேஸ்வரம் வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.