News December 7, 2024
இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் பில்லியனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, UBS சுவிஸ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் ஆண்டறிக்கையில், “2014இல் 1,757ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 2024இல் 2,682ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அவர்களின் எண்ணிக்கை 153இல் இருந்து 185ஆக அதிகரித்துள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 905.6 பில்லியனாக உயர்ந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
ஓபிஎஸ் வருகையால் சிக்கலில் திமுக தலைமை

திமுகவில் இணைந்த உடன், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட இவர்களுக்கு சீட் கன்ஃபார்ம் என சொல்லப்படுகிறது. இதனால், ஏற்கெனவே சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மூத்த திமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனராம். இதனால், MLA மகாராஜன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளை தலைமை சமாதானம் செய்ய தொடங்கி இருக்கிறதாம்.
News March 8, 2026
மாதா மாதம் ₹10,000 பென்ஷன் வேண்டுமா?

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கே <
News March 8, 2026
NDA-வில் விஜய் இணைய வேண்டும்.. பாஜக விருப்பம்!

விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க, <<19326229>>AP DCM பவன் கல்யாண்<<>> முயற்சிப்பதாக பேசப்படுகிறது. இந்நிலையில், விஜய், NDA கூட்டணியில் இணைய வேண்டும் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ANS பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் தனது லட்சியம் என விஜய் கூறுவது உண்மை என்றால், அவர் தங்களோடு இணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது, அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.


