News December 7, 2024

கார்கள் விலையை உயர்த்த முடிவு… மாருதி சூசுகி அறிவிப்பு

image

செலவின அதிகரிப்பால் ஜன. 1இல் கார்கள் விலையை ரூ.25,000 வரை உயர்த்த இருப்பதாக ஹ்யுண்டாய் அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், மாருதி சூசுகியும் விலையை 4% வரை ஜன. 1இல் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகம் கார்கள் விற்பனை செய்யும் முதலிரண்டு நிறுவனங்களாக மாருதி சூசுகி, ஹ்யுண்டாய் உள்ளன. இந்த நிறுவனங்களின் அறிவிப்பு, கார்கள் வாங்க இருப்போரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 20, 2025

BREAKING: வீட்டுக்கடன்… நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

image

வீட்டுக்கடன் வழங்கும் நிதிநிறுவனங்கள், கடன் மதிப்பு விதிமுறைகளை மீறுவதால், கடன்களை கண்காணிக்க NHB(National Housing Bank) திட்டமிட்டுள்ளது. கஸ்டமர்களின் செக்யூரிட்டி ஆவணங்களில் LTV(Loan-to-Value) 75% இருக்கலாம் என்ற விதியை மீறி, சில வங்கிகள் 95% கடன் வழங்குவது தெரியவந்துள்ளது. NHB கண்காணிப்பின் வளையத்திற்குள் இந்நிறுவனங்கள் வந்துள்ளதால், புதிதாக வீட்டுக்கடன் பெறுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News August 20, 2025

30 நாள் கெடு விதிக்கும் சட்டம்: யாருக்கு குறி?

image

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ‘<<17462799>>PM, CM பதவிபறிப்பு மசோதா<<>>’வை எதிர்க்கட்சிகள் முற்றாக எதிர்க்கின்றன. பிரதமரோ, முதல்வரோ அல்லது அமைச்சரோ – தொடர்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தாலே, அவர் பதவியிழப்பார் என்று இந்த மசோதா சொல்வதே காரணம். தேர்தலில் வீழ்த்த முடியாத மாநில அரசியல் தலைவர்களை, வழக்குகள் மூலம் சிறையில் தள்ளி வீழ்த்தும் மறைமுக வியூகமே இது என்கின்றனர் எதிர்கட்சிகள். உங்கள் கருத்து?

News August 20, 2025

காதல்.. டீச்சரை பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவன்

image

மத்தியபிரதேசத்தில் தான் ஒருதலை காதலை வளர்த்துவந்த 26 வயது ஆசிரியையை மீது 18 வயது மாணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருநாள் தன்னை பார்த்து கமெண்ட் அடித்ததால் மாணவர் மீது ஆசிரியை போலீசில் புகாரளித்துள்ளார். இதனால் கடுப்பான அம்மாணவன் டீச்சரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!