News December 6, 2024
திருச்சியில் பிக்கப் வேன் மோதி ஒருவர் பலி: 3 பேர் காயம்

திருச்சி மாத்தூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (56) மற்றும் இவர்கள் உறவினர்கள் 3 பேரோடு ஆட்டோவில் புதுக்கோட்டை நோக்கி சென்ற பொழுது, சிட்கோ அருகில் காய்கறிகள் ஏற்றி வந்த பொலிரோ பிக் அப் வேன் மோதியதில் சந்திரசேகர் பலியானார். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
திருச்சி மாவட்டம் சாதனை!

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறையினர், கல்லுாரிக்கனவு உள்ளிட்ட திட்டங்கள் மூலமான எடுத்த தொடர் நடவடிக்கைகளால், திருச்சி மாவட்டத்தில் 2024–25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த 11,064 அரசு பள்ளி மாணவர்களில், 10,864 பேர் (98 சதவீதம்) உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம், திருச்சி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
திருச்சி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News October 31, 2025
திருச்சி: மகளை சீரழித்த கொடூர தந்தை கைது

துவாக்குடியைச் சேர்ந்தவர் விஸ்வா (34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த சில மாதங்களளாக மனைவியை பிரிந்து தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் தனது 12 வயது மகளை இவர் மிரட்டி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி அளித்த புகாரின் பேரில் விஸ்வாவை போக்சோவின் கீழ் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.


