News March 22, 2024
கரூர்: உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.5,00,000 பறிமுதல்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த ஏடிஎம் நிரப்ப சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் திருச்சி மாவட்டம் வயலூர் பகுதியை சேர்ந்த சுரேந்திரகுமார் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.5,00,000 பறிமுதல் செய்தனர்.
Similar News
News September 19, 2025
கரூர்: BE/B.Tech படித்தால் மத்திய அரசு வேலை!

கரூர் மக்களே.., மத்திய அரசின் மின்னனு கழகமான ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 160 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.31,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே<
News September 19, 2025
லாலாப்பேட்டை: வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை!

கரூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட லாலாப்பேட்டை, கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி பகுதிகளில் விளைந்த வாழைத்தார் அறுவடை செய்யப்பட்டு, லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இன்று பூவன் வாழைத்தார் ரூ.250-க்கும், ரஸ்தாளி ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.150-க்கும் ஏலம் போனது. இந்த விலை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 19, 2025
கரூரில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

கரூர் வெண்ணைமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (செப்.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 200க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளன. 10 முதல் பட்டப்படிப்பு வரை இந்த முகாமில் பங்கேற்கலாம். காலை 10மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு: 04324 223555.