News March 22, 2024
இன்று முதல் போட்டி தேர்வு மையம் தொடக்கம்

தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காலாஞ்சிபட்டியில் ரூபாய் 15- கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு அரசு போட்டி தேர்வு இலவச மையத்தை கடந்த சில மாதங்கள் முன்பு தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுக்கு இங்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.
Similar News
News November 15, 2025
திண்டுக்கல் காவல்துறை சார்பில் அறிவுரை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை “சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம்” என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, சிறுவர்களிடம் வாகனங்களை கொடுக்க வேண்டாம் எனவும் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளனர்.
News November 14, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (நவம்பர் 14) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறைக்குரிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
திண்டுக்கல்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


