News December 6, 2024
திருவாடானை அருகே நாய் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை குரூப் கரைய கோட்டை கிராமத்தில் இன்று இரைதேடி குடியிருப்புக்குள் சென்ற புள்ளிமான் ஒன்றை பார்த்த நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
ராம்நாடு: 12th முடித்தால் அரசு பள்ளியில் வேலை., நாளை கடைசி

ராம்நாடு மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. நாளை கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு <
News October 27, 2025
ராம்நாடு: இனி லைன்மேன் தேடி அலைய வேண்டாம்!

ராம்நாடு மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 27, 2025
தெற்கு ஆசிய தடகளப் போட்டியில் பரமக்குடி மாணவர் சாதனை

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 4வது தெற்கு ஆசிய சீனியர் தடகள போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அசுகரன் விளையாட்டுக் கழக வீரர் சரண்மேகவர்ணம் இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு 4*400M தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற சரண் மேக வர்ணத்தை அசுர விளையாட்டுக் கழக பயிற்சியாளர் அருண் மற்றும் சக வீரர்கள் பாராட்டினர் .


