News December 6, 2024
ஆன்லைன் லோன் குறித்து மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி தினம்தோறும் பொதுமக்களுக்கு பல்வேறு குற்ற செயல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(டிச.06) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், அவசர தேவைக்காக ஆன்லைனில் லோன் வாங்கி ஆபத்தில் சிக்க வேண்டாம். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கவும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
நெல்லையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

நெல்லை பாளையில் உள்ள மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகம் மற்றும் மற்றொரு அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
நெல்லையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

நெல்லை பாளையில் உள்ள மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகம் மற்றும் மற்றொரு அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
நெல்லை: ரூ.250யில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்

நெல்லை ஹை கிரவுண்ட் அரசு மருத்துவமனையில் ரூ.250-ல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யப்படுகிறது. ஸ்கேன், எக்ஸ் ரே, இசிஜி உள்ளிட்ட சேவைகள் இதில் அடங்கும். தேவையான பிற பரிசோதனைகளும் செய்யப்படும். மருத்துவர்களின் ஆலோசனையும் கிடைக்கும். தேவைப்படுபவர்கள் வார்டு 17 ஐ அணுகவும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. *ஷேர் பண்ணுங்க


