News December 6, 2024
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி

தேனி பகுதியைச் சேர்ந்தவர் வைரவன்மாரி. இவர் மினி வேனில் இன்று காலை தேனியில் இருந்து வாழைப்பழங்களை ஏற்றி விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இறக்குவதற்காக சாமிநத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே செங்கல் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலே வாழைப்பழம் ஏற்றி வந்த டிரைவர் வைரவன்மாரி உயிரிழந்தார்.சம்பவம் குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 19, 2025
வத்திராயிருப்பு அருகே மூதாட்டி தீக்குளிப்பு.

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கடந்த அக்.14 ஆம் தேதி மூட்டு வலி தாங்க முடியாமல் வீட்டில் வைத்து உடலில் கற்பூரத்தை தடவி தீ வைத்து காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை கொண்டு சென்று மேல் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News October 18, 2025
BREAKING விருதுநகரில் 8 போலீசார் மீது நடவடிக்கை

விருதுநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் பட்டாசு கடை நடத்தி வருவதாக புகார் எழுந்ததால் எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலிசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து சீனிவாசன், தங்கமுத்து, பழனியப்பன், முருகேசன், சக்திவேல் நெல்லைக்கும், முத்து மாரியப்பன், அயோத்தி ராமசந்திரன், உதயக்குமார் தூத்துக்குடிக்கு மாற்றம் செய்து ஐஜி பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
News October 18, 2025
BREAKING அருப்புக்கோட்டையில் தீபாவளியால் விலை உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டி மிகவும் பிரபலமானது. இந்நிலையில் இன்று (அக்.18) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதில் மல்லிகை ரூ.1,800 , கனகாம்பரம் ரூ.1,000, முல்லை ரூ.1,500, பிச்சி ரூ.1,000 என விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பன்னீர் ரோஸ் கிலோ ரூ.200, மிட்டாய் ரோஸ் கிலோ ரூ.150, மரிக்கொழுந்து ரூ.100 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.