News December 6, 2024
கொரோனா நிவாரண நிதி வழங்கிய எம்.எல்.ஏ.

புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதி உதவியின் கீழ் கொரோனா காலத்தில் உயிரிழந்தோருக்கு ரூபாய் ஐம்பது ஆயிரத்திற்கான காசோலையினை, நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இன்று தனது அலுவலகத்தில் வழங்கினார். இதில் மூன்று குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
Similar News
News February 26, 2026
புதுவை: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு!

புதுவை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 26, 2026
புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவிப்பு

பெண்குழந்தைகளுக்குக் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் வகையில் 14 ஆயிரம் தடுப்பூசிகள் வரும் 28-ம் தேதி முதல் செலுத்தப்பட உள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.
News February 26, 2026
புதுவை: எஸ்ஐ பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

புதுவை காவல்துறையில் 70 எஸ்.ஐ. பணிக்கான எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கோரிமேடு போலீஸ் பயிற்சி கூடத்தில் மார்ச் 4-ம் தேதி நடக்கிறது. தேர்வானவர்கள் தங்களின் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என புதுவை காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை அறிவித்துள்ளார்.


