News December 6, 2024

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விருந்து

image

தருமபுரி மாவட்டம், ஜோதிமஹாலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி கலந்துகொண்டார். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Similar News

News January 12, 2026

தருமபுரியில் துடிதுடித்து பலி

image

அரூர், மேல் பாட்ஷாபேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ஹமீது (55). ஆட்டோவில் 2 பயணிகளுடன் மொரப்பூர்-கல்லாவி ரோட்டில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அப்துல் ஹமீது பலத்த காயம் அடைந்தார். பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்துல் ஹமீது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

தருமபுரியில் கொடூரத்தின் உச்சம்!

image

ஒசஅள்ளி புதூரை சேர்ந்த பிரபுவின் மனைவி ராஜேஸ்வரி (34) ஜன.10-ம் தேதி கல்லகொல்லை மேட்டில் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் ராஜேஸ்வரியின் அக்காள் கணவரான அனுமந்தனுக்கும் (40) கள்ள தொடர்பு இருந்துள்ளது. கடந்த ஜனவரி 10 ம் தேதி ராஜேஸ்வரியை உல்லாசத்திற்கு அழைத்து அவர் மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அனுமந்தன் செங்கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

News January 11, 2026

தருமபுரியில் கஷ்டங்களை நீக்கும் அற்புதத் தலம்!

image

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதியமான் கோட்டை காலபைரவர் கோயில், தென்னகத்தின் மிகச்சிறந்த பரிகாரத் தலமாகும். நம் வாழ்வின் தீராத வினைகளையும், எதிர்ப்புகளையும் நீக்கும் சக்தி படைத்தவர் இக்கோயில் காலபைரவர். குறிப்பாக தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால், ராகு-கேது தோஷங்கள் நீங்கி, தடைபட்ட காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர்!

error: Content is protected !!