News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 4, 2026
லோக் சபாவில் கடும் அமளி.. அவை ஒத்திவைப்பு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, 2-வது நாளாக லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நேற்று எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நேற்று அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து இன்றும் எதிர்க்கட்சி MP-க்கள் அமளியில் ஈடுபட்டதால் லோக் சபா 12 மணிவரை ஒத்தி வைக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
News February 4, 2026
ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு ஏன் அச்சம்? CM

நாடாளுமன்றத்தில் <<19042390>>ராகுல் காந்தி<<>> கேட்கும் கேள்விகளை கண்டு மத்திய அரசு ஏன் அஞ்சுகிறது என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பாக MP-க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் தர மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் லோக்சபாவில் 8 MP-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
News February 4, 2026
சற்றுமுன்: தக்காளி விலை அதிரடியாக சரிந்தது

நான் இல்லாமல் சமையலா என்ற கேள்வியை தக்காளி எப்போதும் நம்மை பார்த்து கேட்கும். ஆனால், நீ இல்லாமலும் எங்களால் இருக்க முடியும் என அதன் விலை சமீபத்தில் நம்மை திகைக்க வைத்தது. 1 கிலோ தக்காளி ₹50 – ₹70 வரை சென்று அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், விளைச்சல் அதிகரித்துள்ளதால், தக்காளி 1 கிலோ ₹10-க்கு விற்பனையாகிறது. இதனால் சமையல் செய்யும் வீட்டுக் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


