News December 6, 2024
கூடங்குளத்தில் அணுக்கழிவு கசிவுக்கு வாய்ப்பில்லை -அமைச்சர்

நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி நேரத்தின் போது கூடங்குளம் அணு உலையில் பயன்பாட்டு எரிபொருளை பாதுகாப்பாக வெளியேற்ற எத்தகைய வழிமுறைகள் கையாளப்படுகின்றன என கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார். கழிவுகள் மீண்டும் எடுக்கப்பட்டு அணு உலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறையின் போது எந்தவித கதிர்வீச்சு கசிவோ அணுக்கழிவு கசிவோ துளியும் வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
Similar News
News November 6, 2025
நெல்லை: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு

நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. நவ.7 அன்று காலை 10:30 மணிக்கு இந்த பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. திறன் வாய்ந்த ஆசிரியர்கள், ஸ்மார்ட் போர்டு வசதியுடன் பயிற்சி அளிக்க உள்ள நிலையில் வாராந்திர மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். SHARE IT
News November 6, 2025
பாளை: வாலிபரை தாக்கி நகைகள், செல்போன் பறிப்பு

கொங்கந்தானபாறையை சேர்ந்த சுபின் வண்ணார்பேட்டையில் இருந்து வடக்கு பைபாஸ் ரோடு வழியாக வெள்ளகோவில் செல்லும் சாலையில் சென்றுள்ளார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி ஏடிஎம் கார்டு, செல்போன், தங்க செயினை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த சுபின் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குது பாளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 6, 2025
நெல்லையில் உயரும் குடிநீர் கட்டணம்

நெல்லை மாநகரில் வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் ரூ.100 இருந்த நிலையில் அதனை வீடுகளின் பரப்பளவு அடிப்படையில் ரூ.120 முதல் ரூ.300 வரை உயர்த்தப்பட உள்ளது. மேலும் பாதாள சாக்கடைக்கான டெபாசிட் தொகை ரூ.5000-ல் இருந்து அதிகபட்சம் ரூ.40,000 வரை உயர இருக்கிறது. நவ.11 அன்று நடைபெறும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.


