News December 6, 2024
கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு: வருந்தும் ஐஸ்வர்யா

தனிப்பட்ட பிரச்னை என்றாலும், தமிழ் சினிமாவில் விவாகரத்துகள் தொடர் கதையாகி விட்டன. இதனால் தனக்கு கல்யாணம் பண்ணவே பயமாக இருப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கல்யாணம் செய்து கொண்டால் நன்றாக வாழணும், நமக்கு இந்த விவாகரத்து எல்லாம் செட் ஆகாது என்கிறார் ஐஸ்வர்யா. ஒருவரை பார்த்தால் காதலித்து கல்யாணம் பண்ணணும்னு தோன்றும், அப்படிப்பட்ட ஒருவரை, தான் இன்னும் சந்திக்கவே இல்லை என்றும் தெரிவித்தார்.
Similar News
News April 30, 2025
ALERT: தினமும் இதை சாப்பிடுகிறீர்களா?

கீழ்காணும் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகம் காலியாகிவிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான உப்பு (பரிந்துரைக்கப்பட்ட அளவு 5 கி) சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்பு, பதப்படுத்திகள் மிகவும் கேடுவிளைவிக்கும். குளிர்பானங்கள் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்துகின்றன. அதீத சிவப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை சிறுநீரகத்திற்கு எமனாக அமையும்.
News April 30, 2025
2 அறை கொடுப்பேன்: VJD காட்டம்

டைம் மிஷின் கிடைத்தால் வரலாற்றில் யாரை சந்திப்பீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களுக்கு 2 அறை கொடுப்பேன் எனவும், ‘சவா’ படம் பார்த்த பிறகு அவுரங்கசீப்பிற்கு 2 அறை கொடுக்க வேண்டும் என தோன்றுவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னிடம் இதுபோன்று அறை வாங்குவதற்கான ஆட்களின் பட்டியல் நிறைய இருப்பதாகவும் கூறினார்.
News April 30, 2025
ஏப்ரல் 30: வரலாற்றில் இன்று

*1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், தனது மனைவி இவாவுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றினர். *1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது. *1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.