News December 6, 2024

ஃபெஞ்சல் புயலுக்கு 28 பேர் பலி

image

கடந்த வாரம் ருத்ர தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் புயலால் 2.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 3,685 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், 96,000 கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 28, 2025

பாகிஸ்தானுக்கு அல்ல சீனாவுக்கான செய்தி

image

இந்தியா சமீபத்தில் அக்னி -5 ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது. ராக்கெட் படையை உருவாக்க உள்ளதாக பாக்., அறிவித்த சில நாள்களில் இதை பரிசோதித்ததால், இது அந்நாட்டிற்கான செய்தி என கூறப்பட்டது. ஆனால், உண்மையில் இது சீனாவிற்கு சொல்லப்பட்ட செய்தி. மணிக்கு 30,000 கி.மீ., வேகத்தில் 5,000 கி.மீ., தூரம் பயணித்து இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது அக்னி -5. இதன்மூலம் சீனாவின் வடக்கு பகுதிகளை எளிதாக தாக்கலாம்.

News August 28, 2025

நடிகர் மாதவன் ஆபத்தில் சிக்கினார்

image

நடிகர் மாதவன் லடாக்கில் உள்ள லே பகுதியில் கடும் மழையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், ‘2008-ல் ‘3 இடியட்ஸ்’ ஷூட்டிங்கின்போது பனிப்பொழிவில் சிக்கினேன். இப்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு லேயில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார். J&K-வில் கனமழை, வெள்ளத்தால் இதுவரை 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News August 28, 2025

இந்த நாட்டில் இந்தியர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

image

இந்தியர்களுக்கான விசா நுழைவு விதிகளை அர்ஜென்டினா தளர்த்தியுள்ளது. இது பற்றி பேசிய இந்தியாவுக்கான அர்ஜென்டினா தூதர் மரியானோ காசினோ, அமெரிக்கா விசா வைத்திருக்கும் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு விசா இன்றி வரமுடியும் என தெரிவித்துள்ளார். விசா தளர்வு இரண்டு நாடுகளுக்கும் அற்புதமான செய்தி எனவும் இந்தியர்களை வரவேற்க அர்ஜென்டினா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

error: Content is protected !!