News December 6, 2024

பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

image

மத்திய அரசு திறன் மேம்பாட்டு மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் வருகிற 9-ந் தேதி வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. எனவே ஐ.டி.ஐ. 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 14, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (அக்டோபர் 13) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News October 14, 2025

குடியாத்தம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் லிங்குன்றம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட சரவணன் (32), வெங்கடேசன் (61), ரகுபதி (35), ராகவன் (30), சேர்ந்த ரவி (48) ஆகிய 5 பேரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News October 13, 2025

சட்டக்கல்லூரியில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டிடம் திறப்பு

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக காட்பாடியில் உள்ள வேலூர் அரசு சட்டக்கல்லூரியில் ரூ.6.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த நிலையில் தொடர்ந்து ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (அக்.13) குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் 1வது மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!