News December 6, 2024
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 50 பேருக்கு பாதிப்பு!

பல்லாவரம் பகுதியில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 2 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொடர்ந்து, 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை குரோம்பேட்டை கோதண்டம் நகரைச் சேர்ந்த 2 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News November 17, 2025
செங்கல்பட்டு: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 17, 2025
செங்கல்பட்டு: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <
News November 17, 2025
செங்கல்பட்டு: ஆயுத்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வில் பங்கேற்க, இலவச ஆயத்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். மீனவர் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து இந்த பயிற்சியை வழங்குகின்றன. இத்திட்டத்தில் பயிற்சிபெற www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து நவ-25 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


