News December 6, 2024

புதுவையில் சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும்

image

ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர் கன மழையால், கடந்த 27, 28 மற்றும் 29ம் தேதி ஆகிய 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில், வரும் 7ஆம் தேதி (புதன்கிழமை பாடத்திட்டம்), 14ஆம் தேதி (வியாழக்கிழமை பாடத்திட்டம்) 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும். 21ஆம் தேதி சனிக்கிழமை செய்முறை தேர்வு 3 நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்தார்.

Similar News

News December 31, 2025

புதுவை: லிப்ட் கேட்டு சென்றவருக்கு நேர்ந்த சோகம்

image

விழுப்புரம் காஞ்சனூரைச் சேர்ந்த கொத்தனார் சேட்டு(50). இவர் வில்லியனூருக்கு கலைவாணன்(20) என்பவர் பைக்கில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சேட்டு வழியிலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 31, 2025

புதுச்சேரி அரசின் முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை ஜனவரி 3 முதல் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பம் அட்டைக்கும் வழங்கப்படும். மேலும் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.

News December 31, 2025

புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

image

புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
புதுச்சேரியில் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டை தினத்தன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து போலீசார் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

error: Content is protected !!