News March 22, 2024
டிரைவர் ஷர்மிளாவுக்கு முன்ஜாமீன்

கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் சர்மிளாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. பெண் காவலர் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதூறாக பரப்பி வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் சர்மிளா மீது மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய ஓட்டுனர் சர்மிளாவிற்கு நீதிமன்றம் இன்ற முன் ஜாமீன் வழங்கியது.
Similar News
News September 9, 2025
கோவை: ரூ.20 லட்சம் வரை கடன் கடனுதவி CLICK NOW !

கோவை மக்களே வேளாண் பட்டதாரிகளுக்கு முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. கல்வி: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு. ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் திட்ட அறிக்கையுடன் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள், விண்ணப்பிக்க இங்கு <
News September 9, 2025
கோவை: நண்பனை குத்தியவருக்கு போலீஸ் வலை!

கோவை நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இருவரும் நண்பர்கள். இந்நிலையில் மணிக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவப்பிரகாசம் மணியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணி மணியக்காரன்பாளையம் பகுதி பேக்கரியில் நின்றிருந்த சிவப்பிரகாசத்தை கத்தியால் குத்தியுள்ளார். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து மணியை தேடி வருகின்றனர்.
News September 9, 2025
முன்னாள் முதல்வர் வருகையொட்டி எம்எல்ஏ ஆய்வு

கோவை மாவட்டத்தில் இன்று (09-09-2025) முன்னாள் முதல்வர் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” எனும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு, அவர் சுந்தராபுரம் பகுதியில் உள்ள சங்கம் வீதியில் பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார். எனவே இதற்கான முன்னேற்பாடுகளை, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.