News December 6, 2024
குலசையில் ராக்கெட் ஏவுதளம்: விவரம் வெளியிட கோரிக்கை?

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு மாதவன் குருச்சியில் சுமார் 1500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆதியாகுறிச்சி பஞ்சாயத்தில் 1,000 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே ஏவுதள பணிக்கு எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்பதை தெரிவிக்க விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News September 9, 2025
BREAKING தூத்துக்குடிக்கு வரும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி செப்.13 அன்று திருச்சியில் தொடங்கி அக்.11ம் தேதி அன்று நெல்லை, குமரி, தூத்துக்குடி மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
News September 9, 2025
தூத்துக்குடியில் வேலை வாய்ப்பு – ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படியில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளது. இதில் ஊதியமாக ரூ.18,000 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க, கூடுதல் விவரங்களை <
News September 9, 2025
BREAKING ஏரலில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் தனியார் செங்கல் சூலை செயல்பட்டு வருகிறது. இங்கு லட்சுமண பெருமாள்(38) என்பவர் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த பணியில் ஈடுபட்ட போது அவர் சிறிது நேரத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.