News December 6, 2024

‘பிட்காயின்’ மதிப்பு ₹84 லட்சமாக உயர்வு… காரணமென்ன?

image

கிரிப்டோகரன்சி மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காயின்’ மதிப்பு, முதன் முறையாக ஒரு லட்சம் டாலரை (₹84 லட்சம்) கடந்துள்ளது. கிரிப்டோ ஆலோசனை கவுன்சில் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருப்பதே இந்த மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமென சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், இந்த மின்னணு கரன்சிகளின் மதிப்பு மேலும் பல மடங்கு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News December 20, 2025

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா?

image

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட் பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அனால் 2026-ல் ஞாயிற்றுக்கிழமை(பிப்.1) வருவதால் அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கிய நிகழ்வுகளுக்காக விடுமுறை தினங்களிலும் நாடாளுமன்றம் கூட வாய்ப்புள்ளது. உதராணமாக 2020-ல், கொரோனா தொற்று காலத்தின் போது அவசர தேவைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் கூடியது.

News December 20, 2025

ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்

image

*உண்மையான நம்பிக்கை ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலையைக் கூட அசைத்துவிடும். *சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன். *ஒன்றை அடையவதற்கு தேவை நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல். *தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை. *மிரட்டிப் பணியவைக்கும் எந்த செயலும் வெறுக்கத்தக்கதே.

News December 20, 2025

கேப்டன் பதவியை இழக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?

image

டி20 போட்டிகளில் இந்தியா அசத்தி வந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கேப்டன் என்பதால் மட்டுமே சூர்யா அணியில் விளையாடுகிறார். துணை கேப்டன் சுப்மன் கில்லின் பார்மும் சிறப்பாக இல்லாததால் WC-ல் SKY தலைமையில் இந்தியா அணி விளையாடும். ஆனால் WC முடிந்த பின் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!