News December 6, 2024

உதயநிதி திமிரின் உச்சத்தில் இருக்கிறார்: ஜெயக்குமார்

image

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஸ்டாலினும், உதயநிதியும் திமிரின் உச்சத்தில் செயல்பட்டு வருகிறார்கள் என்று ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் அப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதற்கு திமுக அரசின் நிர்வாக தோல்வியே காரணம்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News September 11, 2025

TET தேர்வு: மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு

image

TET தேர்வு கட்டாயம் என்ற SC-யின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் TET-ல் தேர்ச்சி பெற வேண்டும்; அப்படி இல்லையென்றால் கட்டாய ஓய்வு வழங்கலாம் என்று செப்.1-ம் தேதி SC தீர்ப்பளித்தது. இதனால், சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அரசு மேல்முறையீடு செய்கிறது.

News September 11, 2025

வெற்று ஊசியை செலுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

image

உங்கள் உடம்பில் வெற்று ஊசியை செலுத்தினால் அது உங்கள் உயிருக்கே ஆபத்து என சொன்னால் உங்களால நம்பமுடிகிறதா? வெற்று ஊசியில் இருக்கும் காற்று ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துமாம். இதனால் அதிகபட்சமாக மாரடைப்பு கூட ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், ஊசியில் இருக்கும் காற்றின் அளவு, செலுத்தப்படும் இடத்தை பொருத்து விளைவானது மாறுபடும். எனவே, விளையாட்டுக்கு கூட இத பண்ணாதீங்க. SHARE.

News September 11, 2025

டிரெண்டாகும் புதிய வகை ❤️காதல்❤️ இனி ‘No Pain’

image

Situationship, Flirtationship போன்றவற்றுக்கே அர்த்தம் புரியாத நிலையில், ‘Date them till you hate them’ என்ற புது டிரெண்ட் வந்துவிட்டது. பார்ட்னருடன் பிரச்னை ஏற்பட்டு, அது பொறுத்துக்கொள்ள முடியாத கட்டத்திற்கு போனால், சண்டை- சச்சரவு என டிராமா இல்லாமல் அமைதியாக கழண்டு கொள்ளலாமாம். இந்த பிரேக் அப் அவ்வளவு வலிக்காது என்றும், ‘அப்பாடா தப்பிச்சோம்’ என்ற உணர்வுதான் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

error: Content is protected !!