News December 6, 2024

உதயநிதி திமிரின் உச்சத்தில் இருக்கிறார்: ஜெயக்குமார்

image

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஸ்டாலினும், உதயநிதியும் திமிரின் உச்சத்தில் செயல்பட்டு வருகிறார்கள் என்று ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் அப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதற்கு திமுக அரசின் நிர்வாக தோல்வியே காரணம்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News October 31, 2025

கிருஷ்ண துளசி vs ராம துளசி! வீட்டில் எது இருக்கணும்?

image

ராம துளசி பச்சை நிறத்திலும், கிருஷ்ண துளசி ஓரளவு பழுப்பு மற்றும் ஊதா நிறத்திலும், குடை வடிவத்திலும் காணப்படுகிறது. ராம துளசி மிகவும் லேசான நறுமணத்தை கொண்டுள்ளது, அதே நேரத்தில் கிருஷ்ண துளசி மிகவும் வலுவான நறுமணத்தை கொண்டுள்ளது. வீட்டின் வடகிழக்கு திசையில், கிருஷ்ண துளசியை நடுவது வீட்டின் நிதி நிலைமையை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.

News October 31, 2025

சுபமுகூர்த்த தினம்.. கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

image

ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினமான இன்று, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 முன்பதிவு டோக்கன்களும் ஒதுக்கீடு செய்யப்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பதிவு செய்ய விரும்புவோர் இந்த நன்னாளில் முந்துங்கள்.

News October 31, 2025

மலைப்பாம்புடன் பிரியங்கா சோப்ரா PHOTOS

image

லாஸ் ஏஞ்சல்ஸில் செட்டில் ஆகிவிட்ட பிரியங்கா சோப்ரா, தனது போட்டோஷூட்களால் ரசிகர்களை இணைப்பிலேயே வைத்துள்ளார். அந்த வகையில், மலைப்பாம்பை கழுத்தில் போட்டபடி, புன்னகையான முகத்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ‘நீங்க தைரியமான பொன்னு தான் அப்டின்னு ஒத்துக்குறோம் பிரியங்கா’ என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். உங்களுக்கு பிரியங்காவிடம் பிடித்தது என்ன?

error: Content is protected !!