News December 6, 2024
சமூகநீதி புரட்சியாளரை நினைவில் ஏந்துவோம்!

கடவுள், மதம், சாதி ஆகியவற்றின் பெயரால் ஒடுக்கப்பட்ட நாட்டின் பூர்வகுடி மக்களின் வாழ்வு உயர வட்டமேசை மாநாட்டில் வாதாடிய குரல் அற்றவர்களின் குரலுக்கு சொந்தக்காரர் அம்பேத்கர். பெரும்பான்மை மக்களின் சமூக விடுதலைக்காக சட்ட அமைச்சர் பதவியை துறந்த பெருந்தகை. நமக்கு உரிமை அளித்த அரசியலமைப்பை வடிவமைத்த அண்ணலின் 68ஆவது நினைவு நாளில் அவர் ஏற்படுத்திய சமூக புரட்சியை நினைவில் ஏந்துவோம்.
Similar News
News April 30, 2025
சூர்யவன்ஷியின் அடுத்த இலக்கு இதுதான்!

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக இன்னும் கடுமையாக உழைப்பேன் என RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். நாட்டுக்காக விளையாடி, சிறந்த பங்களிப்பை கொடுப்பதே தனது லட்சியம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் கொண்டாடப்படுவதற்கு மூலக் காரணம் தனது பெற்றோர்கள் பட்ட கஷ்டம் தான் எனவும் கூறியுள்ளார். GT-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 35 பந்துகளுக்கு சதம் விளாசி பல சாதனைகளை அவர் படைத்தார்.
News April 30, 2025
PAK-கிற்கு பதிலடி? இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கும் PM மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், PAK-கிற்கு எதிராக ராணுவ பதிலடி உள்பட முக்கிய விஷயங்கள் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த 23-ம் தேதி கூடிய பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், சிந்து நதி நீர் நிறுத்தம் உள்பட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
News April 30, 2025
தலை இல்லாத பிரதமர்.. காங். சர்ச்சை பதிவு

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் PM மோடி பங்கேற்காததை விமர்சித்து, அவரது தலை இல்லாத புகைப்படத்தை காங். சமூக வலைதளங்களில் பகிர்ந்தது. இது கடும் சர்ச்சைக்குள்ளான நிலையில், பாக். பாசத்தை காங். காட்டுவதாக பாஜக விமர்சித்திருந்தது. அதேபோல், இது மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என உட்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் எழுந்ததால், அப்பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.