News December 5, 2024

விரைந்து பாடங்களை முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

image

கடலூர், விழுப்புரம், தி.மலை மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டப்படி, அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. எனவே, அனைத்து வகுப்புகளுக்கும் முடிக்கப்படாமல் இருந்த பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் வடிந்த பிறகு, முறையாக பள்ளி திறக்கும்போது, செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

வாக்குத் திருட்டு.. பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

image

எங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்றால் ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களை அழைத்து வருவோம் என கேரள BJP துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக, வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், திருச்சூர் லோக் சபா தேர்தலில் சட்டவிரோதமாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, இவ்வாறு அவர் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News August 24, 2025

யூத அரசுக்கு எதிரான நவீன அவதூறு: இஸ்ரேல் தாக்கு

image

காசாவுக்குள் மனிதநேய உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதாக ஐ.நாவின் IPC அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இது முழுக்க முழுக்க பொய் என்றும், யூத அரசுக்கு எதிரான நவீன ரத்தம் மிகுந்த அவதூறு என்றும் இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு காட்டமாக கூறியுள்ளார். காசாவில் உள்ள ஒருவருக்கு ஒரு டன் வீதம் 2 மில்லியன் டன் உதவிப் பொருள்களை அனுமதித்துள்ளதாகவும் அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News August 24, 2025

பதவி பறிப்பு மசோதாவில் முதலில் PM இல்லை: ரிஜிஜு

image

PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த மசோதாவுக்கான பரிந்துரையின்போது PM பதவி இடம்பெறவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். ஆனால், மோடி இதனை ஏற்க மறுத்ததாகவும், PM-ம் ஒரு குடிமகன், அவருக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு இருக்கக்கூடாது என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதன்பிறகே இந்த மசோதாவில் PM பதவி சேர்க்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!