News December 5, 2024
மதுரையில் ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ

விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிய மூர்த்தி அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக இன்று உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மூர்த்தி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியரை தேடி வருகின்றனர்.
Similar News
News August 8, 2025
மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️SP – 0452-2539477,0452-2539466
▶️ADSP – 9498102171, 9443175424, 9498154615
▶️மேலூர் (DSP) – 9498180078
▶️உசிலம்பட்டி (DSP) – 9442525524
▶️சமயநல்லூர் (DSP) – 9566129088
▶️பேரையூர் (DSP) – 6374643101
▶️திருமங்கலம் (DSP) – 9958380462
▶️திருப்பரங்குன்றம் (DSP) – 9443124892.
News August 8, 2025
மதுரை காமராசர் பல்கலை.,யில் வேலை

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் காலியாக உள்ள கெளரவ விரிவுரையாளர் (Guest Lecturer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Photography, Videography, Layout and Designing, Video Editing உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் ஆக.13ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு Share பண்ணுங்க.
News August 8, 2025
தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபர்த்தியில் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக தவெகவினர் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மாநாட்டில், குழந்தைகள், கர்ப்பிணிகள் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக வருகை தருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.