News December 5, 2024
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல்லில் இன்று 05-12-2024 இரவு 11.00 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News August 18, 2025
BREAKING:திண்டுக்கல் அமைச்சர் வழக்கில் திருப்பம்

அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், இன்று(ஆக.18) உச்சநீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
News August 18, 2025
திண்டுக்கல்: டிகிரி முடித்தால் வங்கியில் சூப்பர் வேலை!

அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News August 18, 2025
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு இன்று விசாரணை

தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர், அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது போடப்பட்ட வழக்கு விசாரணை இன்று(ஆக.18) உச்ச நிதிமன்றத்தில் நடைபெறுகிறது.