News December 5, 2024
புதுகை: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

புதுகை சோலார் தெருவிளக்கு அமைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அறந்தாங்கி அரிமளம் கரம்பக்குடி திருமயம் திருவரங்குளம் மணமேல்குடி குன்றாண்டார் கோவில் கந்தர்வகோட்டை பகுதிகளில் வேலை பார்க்கும் BDO கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மற்ற துறை அரசு அலுவலகங்கள் பீதியில் உள்ளனர்.
Similar News
News November 8, 2025
வெள்ளனூர் அருகே பைக் மோதி இளைஞர் படுகாயம்

வெள்ளனூர் அடுத்த முத்துடையான்பட்டி சாலையில் உஜின் பிலாரன்ஷ்(18) என்பவர் நேற்று SOCயில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறம் பைக்கை ஓட்டி வந்த தியாகராஜன் (31) மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
புதுக்கோட்டை: B.E முடித்தவர்களுக்கு ISRO-வில் வேலை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் வரும் ஜன.24 தேசிய பெண்குழந்தை தினத்தன்று மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் உள்ளிட்ட வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாராட்டு பத்திரமும் ரூ 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி 04322 222270 மூலமாக தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.


