News December 5, 2024
சாம்சங் விவகாரம்- பதிவுத்துறைக்கு ஆணை

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரும் மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிஐடியு தொடர்ந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை இல்லை என சாம்சங் நிறுவனம் வாதிட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 2, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை இல்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 01.11.2025 காலை 6 மணி முதல் 02.11.2025 காலை 6 மணி வரை எந்தத் தாலூகிலும் மழை பதிவாகவில்லை என TNSDMA வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் செம்பரம்பாக்கம் மழை அளவுக் கண்காணிப்பு நிலையங்களில் 0 மிமீ என பதிவாகியுள்ளது. மனிதன், மாடு, வீடு உள்ளிட்ட சேதங்கள் எதுவும் இல்லை என அறிக்கை கூறுகிறது.
News November 2, 2025
காஞ்சிபுரம்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 2, 2025
காஞ்சிபுரம்: விவசாயிகளுக்கு GOOD NEWS!!

காஞ்சி தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு சாகுபடியுடன் தோப்பாகவோ அல்லது வரப்புகளை சுற்றி (பார்டர் கிராப்) வைக்க விலைமதிப்புள்ள தேக்கு மரம், மகாகனி, வேங்கை, செம்மரம் போன்ற மரங்கள் வளர்ப்பதற்கு மானியத்தில் மரங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலை அதிகாரிகளை 95855 80403 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


