News December 5, 2024

குமரி பெண்களுக்கு விருது: கலெக்டர் பாராட்டு

image

குமரியை சேர்ந்த கைவினை கலைஞர்களான ஜான்சி குரூஸ் மற்றும் சிவகுமாரி ஆகியோர் தேங்காய் சிரட்டை ஓட்டில் கலை பொருட்கள் தயாரித்ததற்காக, தமிழக அரசு விருது அறிவித்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு விருதை அமைச்சர் அன்பரசன் சமீபத்தில் வழங்கினார். இந்நிலையில் அந்த பெண் கைவினைக் கலைஞர்களை குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேற்று(டிச.,4) நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்.

Similar News

News October 26, 2025

குமரி : ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்<>கு க்ளிக்<<>> பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க.
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

News October 26, 2025

குமரி: வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

image

முட்டத்திலிருந்து கடந்த 19ஆம் தேதி 23 பேர் ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.49 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மேற்கு வங்கத்தை சேர்ந்த தாகூர் தாஸ் என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News October 26, 2025

குமரி: இன்ஸ்பெக்டர் லஞ்சம்; 4 காவலர்கள் மீது நடவடிக்கை

image

நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் 1.15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரை நாகர்கோவில் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி ஸ்டாலின் இன்று உத்தரவிட்டு உள்ளார்.

error: Content is protected !!