News December 5, 2024

திருப்பூர் கொலை: மேலும் 5 தனிப்படைகள் அமைப்பு

image

பொங்கலூர் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி அவரது மனைவி அலமேலு இவர்களது மகன் செந்தில்குமார் ஆகிய மூன்று பேரும், கடந்த மாதம் 29ஆம் தேதி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், ஏற்கனவே 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மேலும் ஐந்து தனிப்படைகள் அமைத்து மொத்தம் 16 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News August 6, 2025

திருப்பூர்: இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அலுவலர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதுபடி, அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் அலுவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம்.

News August 5, 2025

அரசு மருத்துவக் கல்லூரிக்கு 6.25 லிட்டர் தாய்ப்பால் தானம்

image

அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் தாய்ப்பால் தான விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு தாய்மார்களிடமிருந்து தானமாக பெறப்பட்ட 6.25 லிட்டர் தாய்ப்பால் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

News August 5, 2025

திருப்பூர்: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 17.08.2025 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!