News March 22, 2024
முதல்வருக்கு ஆல் த பெஸ்ட் கூறிய ஆளுநர்

பொன்முடி அமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் முதல்வரும், ஆளுநரும் சுவாரசியமாக பேசிக்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொன்முடி ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்றார். பதவியேற்பு முடிந்த நிலையில், ஆளுநரிடம் பேசிய முதல்வர், இங்கிருந்து நேரடியாக தேர்தல் பரப்புரைக்காக திருச்சி செல்கிறேன் என்றார். அதை கேட்ட ஆளுநர் ரவி, முதல்வரிடம் ஆல் த பெஸ்ட் என்று கூறினார்.
Similar News
News November 4, 2025
மாதம்பட்டிக்கு செக் வைத்த மகளிர் ஆணையம்!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாக ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில், சென்னை காவல்துறை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. பிறப்பு சான்றிதழில், த/பெயர் ரங்கராஜ் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
News November 4, 2025
Waiting List-ல் உள்ள டிக்கெட்டை Confirm பண்ணணுமா?

Waiting List-ல் உள்ள டிக்கெட்டை Confirm செய்ய, IRCTC-ல் Vikalp என்ற அம்சம் உள்ளது. IRCTC-ல் டிக்கெட் புக் செய்த பிறகு, அது Waiting List-க்கு சென்றால், இந்த ஆப்ஷனை IRCTC காட்டும். ஆனால், Vikalp-ல் ஒரு சிக்கல் உள்ளது. நீங்கள் தேர்வு செய்யும் அதே ரயிலில், அதே ஸ்டேஷனில் டிக்கெட் Confirm ஆகும் வாய்ப்பு குறைவு. அதே வழித்தடத்தில் செல்லும் ஏதாவது ஒரு ரயிலில் அருகாமை ஸ்டேஷனில் டிக்கெட் கிடைக்கலாம்.
News November 4, 2025
BREAKING: கனமழை வெளுக்கும்.. வந்தது அலர்ட்

கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று(நவ.4) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதேபோல், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருச்சி மாவட்டங்களில் நாளை பரவலாக கனமழை பெய்யும் எனவும் IMD கணித்துள்ளது. மேலும், நாளை மறுதினமும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.


