News December 5, 2024
விஷச்சாராய விவகாரம் – தமிழக அரசு மேல்முறையீடு

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அதிமுக மற்றும் பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.சிபிஐ விசாரணை மேற்கொண்டால் காலதாமதம் ஆகும் எனவும் தமிழ்நாடு அரசு அதில் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.5) இரவு முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே உள்ள முறுக்கம்பாடி காப்பு காட்டில் இன்று (நவ.5) உதவி ஆய்வாளர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து ரூ.1,90,000 மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனைக்காக கடத்தி வந்த சலீம் பாஷா மற்றும் ஹாஷிரா பேகம், மேகநாதன் என்பவரிடம் 182 கிலோ குட்கா பொருட்களை வழங்கியபோது 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News November 5, 2025
கள்ளக்குறிச்சி மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!


