News December 5, 2024
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது

எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, 15 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 2 படகுகளில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்ததோடு, படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றது. ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டதாகவும், வலைகள், ஜிபிஎஸ் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News April 29, 2025
அதே மணம்.. பூஜா ஹெக்டே கிளாஸிக் லுக்

சமீபமாக, பூஜா ஹெக்டேவின் சேலை கலெக்சன் எனச் சொல்லும் அளவிற்கு அவரது போட்டோஷூட் இருக்கிறது. அந்த வகையில், தனது பாட்டியின் 70 வருட பழமையான காஞ்சிபுரம் சேலையை அணிந்தவாறு, அதன் மணத்தால் அந்த காலத்துக்கே சென்றதாக பூஜா பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். பூஜாவின் நடிப்பில் ரெட்ரோ படம் மே 1-ல் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார்.
News April 29, 2025
அடைமொழிகளில் நம்பிக்கை இல்லை: அஜித்

பத்ம விருதுக்கு ஜனாதிபதி முர்மு, PM மோடி மற்றும் ரசிகர்களுக்கு அஜித் நன்றி தெரிவித்தார். மேலும், எனக்கு அடைமொழிகளில் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. நான் என்னை அஜித் அல்லது ஏகே என குறிப்பிட விரும்புகிறேன் எனக் கூறிய அவர், நடிப்பு, கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல்வேறு விஷயங்களை நான் செய்வதற்கு என் நண்பர்கள் தான் காரணம் எனவும் தெரிவித்தார்.
News April 29, 2025
பாதுகாப்பு படைக்கு முழுச் சுதந்திரம்: PM மோடி அறிவிப்பு

தேவையான பதிலடி, அதற்கான தகுந்த நேரம் உள்ளிட்டவைகளுக்கு ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் உள்ளதாக PM மோடி கூறியுள்ளார். மோடியின் இல்லத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர், முப்படை தலைமை தளபதி, தலைமை ஆலோசகர் ஆகியோருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதனைக் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும், இந்தியர்களின் ரத்தம் கொதிப்படைந்துள்ளதாகவும் PM தெரிவித்திருந்தார்.