News March 22, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாறு அணைக்கட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (45 ). இவர் இன்று காலை மினி லாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார். லாடவரம் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் வரும்போது சாலை ஓரம் இருந்த பனைமரத்தில் நிலை தடுமாறி மினி லாரி மோதியதில் சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

Similar News

News September 9, 2025

பொதுமக்களிடம் மோசடி செய்த வாலிபர் கைது

image

ஆற்காடு ஏரிக் கீழ் தெருவில் சேது என்பவர் ஆற்காடு, மேல்விஷாரம்,ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கித் தருவதாக கூறி பான்கார்டு, ஆதார்கார்டு போன்ற விவரங்களை வாங்கி கையொப்பமும் வாங்கிக்கொண்டு நிறுவனங்களில் பொருட்களை வாங்கி விற்று தவணையை கட்டாமல் இருந்துள்ளார். நிறுவன உரிமையாளர்களிடம் சென்று விசாரித்த போது அவர்கள் உண்மையை கூற சேதுவை போலீசார் கைது செய்தனர்.

News September 8, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப் -08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News September 8, 2025

நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் வழங்கல்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டிலான 70 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை 50% மானியத்துடன் அமைச்சர் காந்தி பயனாளிகளுக்கு இன்று வழங்கினார்.மாவட்ட ஆட்சியர் சந்திரகலா,தோட்டக்கலை துணை இயக்குனர் சிந்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!