News December 4, 2024

அரையாண்டு தேர்வு குறித்து அமைச்சர் தகவல்

image

தமிழகம் முழுவதும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் பெஞ்சல் புயல் மழை காரணமாக கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெள்ளம் பாதித்த 15 மாவட்ட கல்வி அலுவர்களுடன் நேற்று ஆலோசனை செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத சூழல் இருந்தால், அந்த தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News January 14, 2026

தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது

image

கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி அடுத்த அந்தேவனப்பள்ளி கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவரின் பேக்கரியில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் பொருட்களை நேற்று முன்தினம் ஜன-12 வாங்கி கொண்டு பணம் கொடுக்காததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேன்கனிகோட்டை போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 13, 2026

கிருஷ்ணகிரி: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

News January 13, 2026

கிருஷ்ணகிரி: முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு

image

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.*செம திட்டம். தெரிந்த பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!