News December 4, 2024
கோடநாடு வழக்கில் புதிய உத்தரவு!

கோடநாடு கொலை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசிய பத்திரிகையாளர் மேத்யூவுக்கு எதிராக ₹ 1 கோடி மானநஷ்ட வழக்கை இபிஎஸ் தொடர்ந்திருந்தார். இதையடுத்து, மேத்யூ தாக்கல் செய்த பதில் மனுவிலும் இபிஎஸ்-க்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இதற்கு இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேத்யூ தனது பதில் மனுவில் கூறிய கருத்துகளை திரும்ப பெறுவாரா என ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
டாக்டர்கள் ஏன் நாக்கை நீட்ட சொல்கிறார்கள்?

எந்த ஒரு பிரச்னைக்காக ஹாஸ்பிடல் சென்றாலும், டாக்டர்கள் முதலில் ‘நாக்கை நீட்டுங்கள்’ என்பார்கள். அது ஏன் என யோசித்தது உண்டா? நாக்கின் தன்மையை வைத்தே உடல் ஆரோக்கியத்தை அறியலாம். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், நாக்கு மஞ்சள் நிறத்திலிருக்கும். உடலில் ரத்த சோகை இருந்தால், நாக்கு வறண்டு போகும். நோய்த்தொற்று அதிகமாக இருந்தால், நாக்கு வெள்ளையாக மாறும். தைராய்டு இருந்தால், நாக்கு பெரிதாகும்.
News December 3, 2025
பைடன் கையெழுத்திட்ட ஆவணங்கள் செல்லாது: டிரம்ப்

நமது கையெழுத்தை அச்சு அசல் அப்படியே போடும் ஒரு நவீன கருவியே Auto Pen. இதை USA-வில் பைடன் உள்பட பல அதிபர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், Auto Pen வசதி மூலம் பைடன் கையெழுத்திட்ட அனைத்து ஆவணங்களும் செல்லாது என டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், பைடன் Auto Pen பயன்படுத்தியதன் மூலம், வயது மற்றும் மனநிலை காரணமாக அவரால் நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தெரிகிறது என விமர்சித்துள்ளார்.
News December 3, 2025
சேரக்கூடாத இடம் சேர்ந்த செங்கோட்டையன்: நயினார்

செங்கோட்டையன் சேரக்கூடாத இடம் சேர்ந்திருக்கிறார், அவருக்கு தோல்விதான் கிடைக்கும் என நயினார் கூறியுள்ளார். கூட்டணிக்கு என்னை அழைக்கவில்லை என டிடிவி.தினகரன் சொன்னதை பற்றி பேசிய அவர், கூட்டணியில் இருந்து வெளியேறியவரை எப்படி அழைக்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், என்ன பிரச்னை வந்தாலும் EPS தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் எனவும், அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


