News December 4, 2024
108 ஆம்புலன்ஸில் சேர சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் 108 இல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் டிச.7 அன்று திருவாடானை அரசு மருத்துவமனையில் நடக்கும் முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆலோசகராக பணிபுரிய பி.எஸ்.சி. நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், படிப்பு முடித்திருக்க வேண்டும். 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 044-2888 8060 தொடர்பு கொள்ளவும்.
Similar News
News August 14, 2025
இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிரவைசிய சமூகநலச்சங்கம், கடலாடி வட்டாரம்
அ.புனவாசல் செயலக கட்டடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. பரமக்குடியில் நடைபெறும் முகாமில் அப்பகுதி மக்கள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்து பயன் பெறலாம். இத்தகவலை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
ராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

இன்று (13.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
ராமநாதபுரத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை

வருகிற 15.08.2025 அன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று ஆணையரின் அறிவுறுத்தலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.