News December 4, 2024
108 ஆம்புலன்ஸில் சேர சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் 108 இல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் டிச.7 அன்று திருவாடானை அரசு மருத்துவமனையில் நடக்கும் முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆலோசகராக பணிபுரிய பி.எஸ்.சி. நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், படிப்பு முடித்திருக்க வேண்டும். 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 044-2888 8060 தொடர்பு கொள்ளவும்.
Similar News
News August 9, 2025
BREAKING: திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவிற்கு புதிய பதவி

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா, அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இன்று (ஆகஸ்ட்.09) அவருக்கு திமுக இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இப்பொறுப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வழங்கினார்.
News August 9, 2025
ராமநாதபுரம் வழுதூரில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரம், வழுதூர் பகுதியைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய அமைப்பாளர் கவுதமன் வீட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஊர் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் கோவிந்தனின் மகன் பிரபு பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேணிக்கரை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 9, 2025
ராமநாதபுரம்: கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி.?

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவாய்த் துறையில் 29 காலிப் பணியிடங்கள் உள்ளது.
▶️10 ஆம் வகுப்பு தேர்ச்சி
▶️சைக்கிள்/பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
▶️விண்ணப்பதாரர் அதே தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ தமிழில் எழுத/ படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
▶️ செப்டம்பர் 9ம் தேதி கடைசி நாளாகும்.
▶️மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை
இந்த லிங்கில் விண்ணப்பம் <