News December 4, 2024
திருச்சியில் 500 பேர் கைது

திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் இன்று வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் வங்கதேச இந்துக்கள் புறக்கணிப்பு செய்யப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News December 22, 2025
உறையூர்: மகா மாரியம்மன் கரக உற்சவ திருவிழா

உறையூர் வண்டிக்கார தெரு பகுதியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் 100-வது ஆண்டு கரக உற்சவ திருவிழா வரும் டிச.,30-ம் தேதி அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. மேலும் டிச.,31 அன்று மாலை 4 மணி அளவில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
திருச்சி மக்களே கடன் தொல்லையா? இத பண்ணுங்க

திருச்சி அருகே வயலூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும், ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது தனி சிறப்பாகும். மேலும் அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் முருகனை வழிபட்டால் கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை தீரும் என்பது நம்பிக்கை. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 22, 2025
மணப்பாறை முறுக்கு குறித்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

திருச்சி மாவட்டம், மணப்பாறையின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்கு தொழிலை மேம்படுத்தும் விதமாக, மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மணப்பாறையில் முறுக்கு உற்பத்தி கிளஸ்டர் அமைக்க வேண்டும் என, திமுக ராஜ்ய சபா எம்பி ராஜாத்தி சல்மா, மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கினார்.


