News December 4, 2024
நாகை விவசயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

2024 – 25 ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய ஏதுவாக தேக்கு கொய்யா, மருது, இலுப்பை, நாவல் போன்ற மரக்கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகின்றன. எனவே இதில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News August 22, 2025
நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவானது வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 29-ந்தேதி அன்று ஒருநாள் மட்டும் நாகை மற்றும் கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஈடுசெய்ய செப்டம்பர் 13-ந்தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News August 22, 2025
ரவுடிகள் மீது கடும் நடவடிக்க எடுக்க போலீஸ் சூப்ரண்ட் உத்தரவு

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.
இதில், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பின்னர் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளசாராயம் கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீதும் ரவுடிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எஸ்.பி.செல்வகுமார் உத்தரவிட்டார்
News August 21, 2025
நாகை மக்களே.. சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு!

நாகையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு www.<