News December 4, 2024
என்னை நானே பார்ப்பது போல் இருந்தது: கே.எல்.ராகுல்

10 ஆண்டுகளுக்கு முன் AUS மண்ணில் முதல் முறையாக ஓபனிங் இறங்கியபோது எப்படி உணர்ந்தேனோ, அதே நிலையில்தான் ஜெய்ஸ்வாலும் இருந்ததாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். பதட்டம் அடையாதே, 3 முறை மூச்சை நன்கு இழுத்து விடு என முரளி விஜய் தனக்கு அப்போது சொன்ன அறிவுரையை, ஜெய்ஸ்வாலுக்கு சொன்னதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், முதல் 30 பந்துகளுக்கு அவரை CALM-ஆக வைக்க முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
UAEக்கு எதிராக பும்ரா ஆடணுமா? அஜய் ஜடேஜா

UAE-க்கு எதிரான போட்டியில் பும்ரா தேர்வு செய்யப்பட்டதை அஜய் ஜடேஜா விமர்சித்துள்ளார். எப்போதும் பும்ராவை பதுக்கும் நீங்கள் UAE-க்கு எதிராக அவரை ஆட வைக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளார். பும்ரா காயமடைவதை தவிர்க்க விரும்பினால் இதுபோன்ற போட்டிகளில் ஆட வைக்காதீர்கள் அல்லது அவரை பாதுகாக்காதீர் என்று கூறினார். இங்கி. எதிரான முக்கியமான தொடரில் பும்ரா 3 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடினார்.
News September 11, 2025
செப்டம்பர் 11: வரலாற்றில் இன்று

*1803 – டெல்லியில் பிரிட்டிஷ் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் 2-ம் ஆங்கிலேய மராத்திய போர். *1921 – சுப்பிரமணிய பாரதி மறைந்த நாள். *1957 – இம்மானுவேல் சேகரன் மறைந்த நாள். *1982 – ஷ்ரேயா பிறந்தநாள். *2001 – நியூயார்க் உலக வர்த்தக மையம், பென்டகன் மீது அல்-கொய்தா நடத்திய தாக்குதல்களில் 2,974 பேர் கொலை. *2012 – பாகிஸ்தானில் ஆடை தொழிற்சாலைகளில் நிகழ்ந்த தீ விபத்தில் 315 பேர் உயிரிழப்பு.
News September 11, 2025
ஸ்ரீலீலாவின் கட்டிப்பிடி வைத்தியம்

SM-ல் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு நடிகை ஸ்ரீலீலா சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார். மனச்சோர்வில் இருந்து விடுபடுவது எப்படி என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, ஸ்ரீலீலா உங்கள் குடும்பத்தில் ஒருவரை கட்டிப்பிடியுங்கள் எனவும் இசையைக் கேளுங்கள் என்றும் பதிலளித்தார். இது உங்களுக்கு உதவுமா என்று எனக்கு தெரியாது… ஆனால் நான் அதைத்தான் செய்கிறேன் என ஸ்ரீலீலா தெரிவித்தார்.