News December 4, 2024
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கால்நடைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் ஏற்றி சென்ற போது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் வழங்க வேண்டும். ஒவ்வொரு கால்நடைகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளி வாகனத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.17) இரவு 10 மணி முதல் இன்று(செப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
தஞ்சை மாவட்ட வளர்ச்சி பணி ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் இன்று (செப்.17) நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம். அரவிந்த் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் முன்னிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டது.
News September 17, 2025
தஞ்சை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <